தருமபுரியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்
முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களை முடக்காமல் செயல்படுத்த வேண்டும் எனக் கோரி புதன்கிழமை தருமபுரியில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களை முடக்காமல் செயல்படுத்த வேண்டும் எனக் கோரி புதன்கிழமை தருமபுரியில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலர் சி. நாகராசன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஜி. நாகராஜன், துணைத் தலைவர்கள் பி. ஆறுமுகம், ஜி. வெங்கட்ராமன், சி. அங்கம்மாள், ஏ. தெய்வானை, இணைச் செயலர்கள் எஸ். சண்முகம், சி. ரகுபதி, பி. ஜீவா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நலவாரியப் பயன்கள் கோரும் விண்ணப்பங்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து காலதாமதமின்றி அவற்றை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.