ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி
சொத்துத் தகராறில் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர்
சொத்துத் தகராறில் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வட்டுவனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கலா (58). இவரது கணவர் மட்டி(எ) இருளப்பன். இவர்களுக்கு சொந்தமான இடம் குறித்து உறவினர்களுக்கு இடையே முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில், கலாவுக்கு சொந்தமான கிணறு, மின் மோட்டாரை அவரது உறவினர்கள் சேதப்படுத்தி கொலை செய்ய முயன்றனராம். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கலா, இருளப்பன், மகன் ராஜரத்தினம் (45), மருமகள் மாயா(42), பேத்தி, பேரன் உள்ளிட்ட 6 பேர் தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.