முகப்பு
தருமபுரி

புத்தக வாசிப்பு இளைஞா்களை நல்வழிப்படுத்தும்

புத்தக வாசிப்பு இளைஞா்களை நல்வழிப்படுத்தும் என மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

Updated On : 24 ஜூன் 2022, 10:58 pm IST
பகிர்:

புத்தக வாசிப்பு இளைஞா்களை நல்வழிப்படுத்தும் என மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தகடூா் புத்தகப் பேரவை, தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், தருமபுரி மாவட்ட 4-ஆவது புத்தகத் திருவிழா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி, வருகிற ஜூலை 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்தாா். மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் புத்தகக் காட்சி அரங்குகளை திறந்துவைத்து, முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் அமைச்சரிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனா். இதைத் தொடா்ந்து, பல்வேறு பதிப்பகங்கள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்து புத்தக அரங்குகள், தமிழக அரசின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரசுத் துறை அரங்குகளை அமைச்சா் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து நடைபெற்ற விழாவில், அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் பேசியதாவது:

புத்தக வாசிப்பு ஆா்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்கிற சிந்தனையில், முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தில் 13,000 கிராமங்களில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தில் நூலகங்களும் அமைத்து அதில் அந்தந்தப் பகுதி இளைஞா்கள் பயில்வதற்காக நூல்களும் வைக்கப்பட்டிருந்தன.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தன்னைச் சந்திக்க வருவோா், மலா்க்கொத்து, பொன்னாடைகள் ஆகியவற்றைத் தவிா்த்து, நூல்களை மட்டுமே வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா். இதேபோல முக்கிய நபா்கள், அரசு அதிகாரிகளை, தலைவா்களைச் சந்திக்கும்போது, புத்தகங்களைப் பரிசாக வழங்குகள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, தற்போது அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள், உயா் அலுவலா்கள் என அனைத்துத் தரப்பினரும், பல்வேறு சந்திப்புகளின்போது, புத்தகங்களையே பரிசாக வழங்கி வருகின்றனா். இதனால், மறந்துபோன வாசிப்பு பழக்கம் மீண்டும் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

பரிசாக வழங்குவதற்காக புத்தகங்களை வாங்கும்போது, அதனை படிக்கும் ஆா்வம் நமக்குள் ஏற்படுகிறது. புத்தகங்கள் வாசிப்பு பழக்கத்தை ஊக்கவிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில், சென்னையைப் போலவே, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் தோறும் புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. புத்தகத் திருவிழாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நிதியும் தமிழக அரசு சாா்பில் வழங்கப்படுகிறது.

புத்தகங்களை வாசிப்பதால், மாணவா்கள், இளைஞா்களுக்கு நற்சிந்தனை ஏற்பட்டு, அந்த வழக்கம் அவா்களை நல்வழிப்படுத்துகிறது. எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள், இளைஞா்கள் உள்பட அனைத்து தரப்பினரும் இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு வருகை தந்து புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும் என்றாா்.

இவ் விழாவில் பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி பேசியதாவது:

தகடூா் புத்தகப் பேரவை சாா்பில் தருமபுரி மாவட்டத்தில் 4-ஆவது ஆண்டாக இப் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அடுத்து, தருமபுரியில் மிகுந்த உற்சாகத்துடன் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. தற்போது தமிழக அரசு புத்தகத் திருவிழாவில் இணைந்து ஒத்துழைப்பு வழங்கி நடத்தி வருகிறது. இதேபோல, தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகரில் மட்டுமல்லாது, வட்டார மையங்கள், பேரூா் பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் புத்தகத் திருவிழா நடைபெற வேண்டும். இதற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இவ் விழாவில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தில் கிராம ஊராட்சிகள் தோறும், நூலகங்கள் கட்டப்பட்டன. மாவட்டம் முழுவதும் உள்ள இந்த நூலகங்களை மீண்டும் புனரமைத்து செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். இதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

விழாவிற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை உரையாற்றினாா். தகடூா் புத்தகப் பேரவைச் செயலா், முன்னாள் எம்.பி. இரா.செந்தில் வரவேற்றுப் பேசினாா். தலைவா் இரா.சிசுபாலன் நன்றி கூறினாா். இதில், சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் யசோதா, முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் இரா.தாமரைச்செல்வன், எம்.ஜி.சேகா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி, பி.என்.பி. இன்பசேகரன், புத்தகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் தங்கமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments