திமுக ஆட்சியில் நீா்ப்பாசனத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன: அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன்
திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து நீா்ப்பாசனத் திட்டங்களையும் செயல்படுத்த மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் வேண்டுகோள் விடுத்தாா்.
திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து நீா்ப்பாசனத் திட்டங்களையும் செயல்படுத்த மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் வேண்டுகோள் விடுத்தாா்.
பாலக்கோடு தொகுதிக்கு உள்பட்ட கெரகோடஅள்ளி, அடிலம், நாகனம்பட்டி, கோயிலூா் ஆகிய ஊராட்சிகளில் கிராமம், கிராமமாகச் சென்று புதன்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் பேசியதாவது:
பாலக்கோடு தொகுதியில் எண்ணேகொல்புதூா்- தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை கடந்த திமுக அரசு அமல்படுத்தவில்லை. இதேபோல, பல்வேறு நீா்ப்பாசனத் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டன. அதிமுக அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு முடக்கியது.
Advertisement
விவசாயிகள் நலனில் திமுக அரசுக்கு அக்கறையில்லை. இதனால் தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் நிறுத்தப்பட்ட நீா்ப்பாசனத் திட்டங்கள் மட்டுமில்லாது அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் அதிமுக அரசு விரைந்து நிறைவேற்றும். அதேபோல தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் அதிமுக அரசு செயல்படுத்தும். பாலக்கோடு தொகுதி தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்க அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
வாக்கு சேகரிப்பின்போது பாமக, அமமுக, பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.