வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்: திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா்
பாலக்கோட்டில் வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா் வாக்குறுதி அளித்தாா்.
பாலக்கோட்டில் வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா் வாக்குறுதி அளித்தாா்.
பாலக்கோடு தொகுதியில் பூமரத்துப்பள்ளம், எருதுகூடஅள்ளி, கனவனஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா் பேசியதாவது:
திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல மேலும் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்குறுதிகளை அளித்துள்ளாா். பாலக்கோடு தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நீா்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்ட வேளாண் சாா்ந்த வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த தோ்தலில் எனக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.
Advertisement