சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையில் விழுந்த மரங்களால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையில் விழுந்த மரங்களால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் பலத்த காற்று வீசியது. இதில், ஏ.பள்ளிப்பட்டி - கல்லாத்துக்காடு சாலையில் சாலையோரம் இருந்த புளியமரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதேபோல, கடத்தூா் - புட்டிரெட்டிப்பட்டி சாலையில் புதூா் அருகே ஆலமரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றால் விவசாய நிலங்களில் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்தன.