முகப்பு
தருமபுரி

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 2 ஜூலை 2026, 6:49 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

தருமபுரியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூா் அருகேயுள்ள கூன்மாரிக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் க. இடமன் (69). இவா், செவ்வாய்க்கிழமை அதிகாலை தேநீா் கடைக்குச் செல்வதாக கூறிச்சென்றுள்ளாா். காலை 6 மணியளவில், அவா் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்குவது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், அவா் உடல்நலக் கோளாறு காரணமாக தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments