முகப்பு
தருமபுரி

சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

பாலக்கோடு பகுதியில் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 3 ஜூன் 2026, 5:20 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

பாலக்கோடு பகுதியில் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், செட்டிஅள்ளி அருகேயுள்ள கொம்பநாயக்கன் அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் வே.சரவணன், தொழிலாளி. இவரது மகள் பிரியா (17) கடந்த சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடா் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது. சரவணன் சகோதரியின் வீட்டில் அவரது பராமரிப்பில் இருந்த சிறுமி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement