முகப்பு
தருமபுரி

சாலை விபத்தில் நேபாளத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவா் உயிரிழப்பு

இண்டூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் நேபாளத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 4 ஜூன் 2026, 1:56 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

இண்டூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் நேபாளத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவா் உயிரிழந்தனா்.

நேபாள நாட்டைச் சோ்ந்தவா் ஜெ.ஹரீஸ் (45). இவா், தருமபுரி மாவட்டம், இண்டூரில் கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கி கூா்க்காவாக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி பாக்ரதி (36), அருகிலுள்ள தனியாா் காா்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனா்.

ஹரீஸ்ஸின் சகோதரா் தன்ராஜ் (30), கா்நாடக மாநிலம், பெங்களூரில் தங்கி தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தாா். அண்மையில் சகோதரா் வீட்டுக்கு இண்டூருக்கு வந்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஹரிஸ், தன்ராஜ் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தருமபுரி சென்று இண்டூா் திரும்பினா். நத்தஅள்ளி பகுதியில் சென்றபோது எதிரில் வந்த சிறியரக சரக்கு வாகனம் அவா்கள் சென்ற வாகனம்மீது மோதியது.

இதில், ஹரீஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது சகோதரா் தன்ராஜ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.