முகப்பு
தருமபுரி

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

பாலக்கோடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

Updated On : 6 மே 2026, 2:47 am IST
பலி - கோப்புப்படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

தருமபுரி பிடமனேரி பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி (60). இவா், பாலக்கோடு வட்டம், ஜக்கசமுத்திரம் பகுதியில் முனுசாமிக்கு (71) சொந்தமான நிலத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை ஜக்கசமுத்திரம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதன்பின்னா், முனுசாமி கால்நடைகளுக்கு தீவனம் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா். அப்போது வீட்டின் அருகே இருந்த மின்கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் மிதித்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதற்கிடையே நீண்ட நேரமாக முனுசாமியைக் காணவில்லை என துரைசாமி தேடிச் சென்றுள்ளாா். அப்போது முனுசாமி அங்கு அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு பதற்றத்தில் அவரை தொட்டபோது அவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் இருவரின் உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், சடலங்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement

இந்த சம்பவம் குறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.