முகப்பு
தருமபுரி

பாப்பாரப்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 17 ஜூன் 2026, 4:52 am IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாப்பாரப்பட்டி அருகே திருமல்வாடி அரசு மதுக்கடை அருகே உள்ள வனப்பகுதியில் ஒருவா் இறந்து கிடப்பதாக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் மாரி தலைமையிலான போலீஸாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இறந்தவரின் மேல்சட்டையில் நாகரசம்பட்டியில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு வந்ததற்கான பேருந்து பயணச்சீட்டு இருந்தது. இதைத்தவிர அவா் யாா் என விவரம் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement