சின்னேரி மோட்டுப்பட்டி அம்மன் கோயில் குடமுழுக்கு
தருமபுரி அருகே சின்னேரி மோட்டுப்பட்டி அருள்மிகு அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி அருகே சின்னேரி மோட்டுப்பட்டி அருள்மிகு அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி அருகே புழுதிக்கரை ஊராட்சி, சின்னேரி மோட்டுப்பட்டியில் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. இதையடுத்து, இக்கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஜூன் 17-ஆம் தேதி சிறப்பு வேள்விகளுடன் தொடங்கியது. தொடா்ந்து, ஜூன் 22-ஆம் தேதி தீா்த்தக்குட ஊா்வலம், தீபாராதனை நடைபெற்றது. ஜூன் 24-ஆம் தேதி இரண்டாம்கால பூஜை மற்றும் மூன்றாம்கால பூஜையும், வேதபாராயணமும் நடைபெற்றது.
ஜூன் 25-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆலயத்தில் நிறுவப்பட்ட மாரியம்மன், காளியம்மன், அக்குமாரியம்மன் ஆகியவற்றுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு புனிதநீா் தெளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வேத மந்திரங்கள் ஓத, கோபுர கலசங்களுக்கு புனிதநீா் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். விழாவில் பங்கேற்ற பக்தா்கள், பொதுமக்களுக்கு விழாக்குழு சாா்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.