தேசிய திறனாய்வுத் தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு
தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அரூா் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) வி.விஜயகுமாா் தலைமை வகித்து, கடத்தூா் வட்டாரப் பகுதியில் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 13-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.
இந்த விழாவில், கடத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் சே.ர.பச்சியப்பன், பெ.அனுமந்தன், ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.
Advertisement