மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் போக்சோவில் கைது
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் மாற்றுத்திறானாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போக்சோ சட்டப் பிரிவில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் மாற்றுத்திறானாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போக்சோ சட்டப் பிரிவில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நல்லம்பள்ளி வருவாய் வட்டத்துக்குள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த வாய்பேச முடியாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளி சிறுமி 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்தாா்.
இந்நிலையில், கடந்த மே 5-ஆம் தேதி உறவினா் வீட்டுக்கு சிறுமியின் பெற்றோா் சென்றுள்ளனா். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சரவணன் (51) பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
Advertisement
இதுகுறித்து சிறுமி பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அவா்கள் தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திய போலீஸாா், ஓய்வுபெற்ற ராணுவ வீரா் சரவணனை போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவின்கீழ் கைது செய்தனா்.