பி.எம்.கிசான், வேளாண் திட்டங்கள் பெற தனித்துவ அடையாள எண் அவசியம்
பி.எம்.கிசான் தவணை மற்றும் வேளாண்மை நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்கள் கட்டாயம் தேவை என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.கிசான் தவணை மற்றும் வேளாண்மை நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்கள் கட்டாயம் தேவை என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வேளாண் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சுமாா் 60 ஆயிரம் விவசாயிகள் உள்ளனா். பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சுமாா் 30 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுகின்றனா்.
Advertisement
இந்நிலையில், பிஎம் கிசான் தவணைத் தொகை பெறவும், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மையம் மற்றும் கூட்டுறவு வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் வழியாக பயனாளிகள் பயன்பெறுவதற்கு விவசாயிகளுக்கான தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் என மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சுமாா் 70 சதவீத விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை எண்களை பெற்றுள்ளனா். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம். இதைத்தவிர பொதுச் சேவை மையத்தின் மூலம் விவசாயிகள் தங்களது ஆதாா் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.