தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக மது, கஞ்சா விற்பனை: 33 போ் கைது
தருமபுரி மாவட்டத்தில் 3 நாள்களில் முறைகேடாக மது மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 33 போ் கைது
தருமபுரி மாவட்டத்தில் 3 நாள்களில் முறைகேடாக மது மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 33 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் முறைகேடான வகையில் நடைபெறும் மது விற்பனையைத் தடுக்கும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் முறைகேடாக (கள்ளச்சந்தையில்) மது விற்பனை செய்த 27 போ் கண்டறியப்பட்டு வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், அவா்களிடமிருந்து 1,102 மதுபாட்டில்களும், விற்பனைக்கு பயன்படுத்திய 6 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக 6 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து ஒன்றே முக்கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுபோல முறைகேடாக மது விற்பனை மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோா்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.