அதிமுக ஆலோசனைக் கூட்டம்
ஊத்தங்கரையில் அதிமுக ஒன்றிய, நகர செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையில் அதிமுக ஒன்றிய, நகர செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அக் கட்சியின் ஊத்தங்கரை அவைத் தலைவர் கே.ஆர்.சுப்பிரமணி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஏ.சி. தேவேந்திரன் வரவேற்றார்.
மாநில நில வள வங்கி தலைவர் சாகுல்அமீது, மாவட்ட அண்ணா தொழில்சங்கத் தலைவர் நாகராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணன், நகரச் செயலாளர் பி.கே.சிவானந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வரும் மக்களவைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி நிலைய குழு அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் ஆலோசனை வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.