கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்வு
கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 41 அடியாக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 41 அடியாக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. ஞாயிற்றுகிழமை நிலவரப்படி விநாடிக்கு 621 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 606 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், நெடுங்கல் அணையிலிருந்து பாரூர் ஏரிக்கு விநாடிக்கு 200 கன அடியும், கெலவரப்பள்ளி அணையிலிருந்து விநாடிக்கு 610 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டம் 42.15 அடியாக உள்ளது.