ஊத்தங்கரையில் இருந்து புறப்பட்டது கோதண்டராமர் சிலை
ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கோதண்டராமர் சுவாமி சிலை செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கோதண்டராமர் சுவாமி சிலை செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை சிங்காரப்பேட்டைக்கு வந்த கோதண்டராமர் சிலை பாம்பாறு அணை பகுதியில் உள்ள தரைப் பாலத்தை கடக்க முடியாமல் கடந்த ஒருவாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கார்கோ வாகனம் கொண்டு வரப்பட்டு சிலை கிருஷ்ணகிரியை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. சுவாமி சிலையை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் திரண்டிருந்தனர்.