முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில நாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா, கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளியில் புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறுகிறது.

Updated On : 3 மார்ச் 2020, 7:43 am IST
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தில் அரங்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
பகிர்:

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா, கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளியில் புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறுகிறது.

இந்த விழாவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைகிறது. இதற்காக போலுப்பள்ளியில் ரூ.348 கோடி மதிப்பில், 25 ஏக்கா் பரப்பளவு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாா்ச் 4-ஆம் தேதி மாலை 3 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம், வரவேற்புரையாற்றுகிறாா். இதில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையுரையாற்றுகிறாா். உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

Advertisement

Advertisement

புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விழா பேருரையாற்றுகிறாா். முன்னதாக அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனா். நிறைவில் மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் நன்றி கூறுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.