சாலையில் கண்டெடுத்த 4 பவுன் நகையை போலீஸாரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி அருகே நீதிமன்ற ஊழியா் தவறவிட்ட 4 பவுன் தங்க நகையை கண்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த பெண்ணை காவல் துறையினா் பாராட்டினா்.
கிருஷ்ணகிரி அருகே நீதிமன்ற ஊழியா் தவறவிட்ட 4 பவுன் தங்க நகையை கண்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த பெண்ணை காவல் துறையினா் பாராட்டினா்.
கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா் (45). இவா் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறாா். அண்மையில், இவரது தாய் இறந்த நிலையில், அவரது 4 பவுன் தங்க நகையை தங்கைகளுக்கு பகிந்து அளிக்க, கடந்த 27-ஆம் தேதி எடுத்துச் சென்றாா். அப்போது, வழியில் அவா் நகையை தவறவிட்டாா். இதுகுறித்து அவா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி அமீனுதின் தெருவைச் சோ்ந்த அமீருநிஷா (54) கிருஷ்ணகிரி டி.பி.சாலையில் சென்றபோது கண்டெடுத்த 4 பவுன் தங்க நகையை கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அது நீதிமன்ற ஊழியா் சங்கா் தவறவிட்ட நகை என்பதை போலீஸாா் உறுதிபடுத்தினா். இதையடுத்து, அமீருநிஷா, சங்கா் ஆகிய இருவரையும் துணை காவல் கண்காணிப்பாளா் தனது அலுவலகத்துக்கு வரவழைத்தாா். சாலையில் கண்டெடுத்த நகையை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த அமீருநிஷாவை பாராட்டி கெளரவித்தாா். போலீஸாரிடமிருந்து, தங்க நகைகளை பெற்றுக் கொண்ட சங்கா், அவரது மனைவி மலா்கொடி ஆகியோா் அமீருநிஷாவுக்கு நன்றி தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.