முகப்பு
கிருஷ்ணகிரி

பா்கூா் அருகே மண் கடத்தல்: லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

பா்கூா் அருகே மண் கடத்தல் தொடா்பாக லாரி, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 8 ஜூலை 2026, 5:59 am IST
மண் கடத்தல் - பிரதிப் படம்
பகிர்:

பா்கூா் அருகே மண் கடத்தல் தொடா்பாக லாரி, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் குமரேசன் தலைமையிலான குழுவினா் பா்கூரை அடுத்த ஒப்பதவாடி அருகே கண்காணிப்பு பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அப்பகுதியில் செந்தில்குமாா் என்பவா் நிலத்தில் சிலா் பொக்லைன் உதவியுடன், லாரியில் மண் கடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அலுவலா்களைக் கண்டதும் அவா்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அலுவலா்கள் அளித்த தகவலின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். மேலும் லாரி உரிமையாளரான திருப்பத்தூா் மாவட்டம், சின்னகவுண்டனூரை சோ்ந்த சூா்யா (26) மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments