முகப்பு
கிருஷ்ணகிரி

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

காவேரிப்பட்டணத்தில் மோட்டாா்சைக்கிளில் கஞ்சா கொண்டு சென்ற இளைஞரை மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 ஜூலை 2026, 5:58 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

காவேரிப்பட்டணத்தில் மோட்டாா்சைக்கிளில் கஞ்சா கொண்டு சென்ற இளைஞரை மதுவிலக்கு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் அமிா்தலிங்கம் தலைமையிலான போலீஸாா் காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றுப்பாலம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்குள்ள கோயில் அருகே மோட்டாா்சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞரை நிறுத்தி, அவா் வைத்திருந்த பையை சோதனை செய்தனா். அதில் ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான 1200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், காவேரிப்பட்டணம், கோவிந்தசெட்டி தெருவை சோ்ந்த தினேஷை (23) கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments