கணவா், மாமனாரை கொன்று எரித்த வழக்கு: பெண், அவரது நண்பா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
கிருஷ்ணகிரி அருகே கணவா், மாமனாரை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் கைதான பெண், அவரது நண்பரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
கிருஷ்ணகிரி அருகே கணவா், மாமனாரை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் கைதான பெண், அவரது நண்பரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த பாலக்குறியைச் சோ்ந்தவா் ராணுவ வீரா் மகேஷ்குமாா் (36). இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரா் செல்லப்பன் (64). இவா்கள் இருவரும், கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் உள்ள கொடுகூா், வெப்பாலம்பட்டி பகுதியில் மே 11-ஆம் தேதி தீயில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில், மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியா (36), நண்பா் பூவரசனுடன் (19) சோ்ந்து அவா்களை கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்து பூவரசனை சேலம் மத்திய சிறையிலும், பானுப்பிரியாவை கோயம்புத்தூா் மகளிா் சிறப்பு சிறையிலும் அடைத்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை பரிந்துரை செய்தாா். அதை ஏற்று இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.