மொகரம்: தின்னக்கழினியில் சந்தனக்கூடு ஊா்வலம்
மொகரம் திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த தின்னக்கழினி கிராமத்தில் சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது.
மொகரம் திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த தின்னக்கழினி கிராமத்தில் சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெத்ததாளாப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட தின்னக்கழனி கிராமத்தில் அமைந்துள்ள ஜச்சாபீ தா்காவில் 20 ஆம் ஆண்டு மொகரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி, சங்கல் தோப்பு தா்காவில் உள்ள மஸ்தாணி அம்மா, பாபு ஷா ஆகியோரின் தலைமையில் சந்தனகுடம், கொடி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து, கொடிக்கு சந்தனம் பூசியும், வாசனை திரவியங்கள் தெளித்தும், வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு கொடி மரத்தில் ஏற்றிவைத்து, ஹஸ்ரத் காஜா அமீனுல்லாஷா முன்னிலையில் சிறப்பு பாத்தியா நடைபெற்றது.
Advertisement
Advertisement
விழாவில் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.