முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Updated On : 6 மே 2026, 2:24 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லவே மிகவும் சிரமப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை மாலை இப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது. கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என பொதுமக்கள் அஞ்சியிருந்த நிலையில் ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Advertisement