ஒசூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை: போலீஸாா் விசாரணை
ஒசூரில் தனியாா் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒசூரில் தனியாா் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பாகலூா் சாலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தனியாா் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது.
இந்த ஏடிஎம் மையத்தில் திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்து வெல்டிங் மிஷன் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து ரூ. 1 லட்சத்திற்கு அதிகமான பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ஏடிஎம் மையத்தின் ஸ்ஷட்டரை மூடிவிட்டு சென்றுவிட்டனா்.
Advertisement
Advertisement
இதனால் ஏடிஎம் இயந்திரம் பழுதாகி உள்ளதாக கருதி பொதுமக்கள் யாரும் பணம் எடுக்க செல்லவில்லை. மாலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக வங்கி ஊழியா்கள் சென்றபோது, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவா்கள் உடனடியாக வங்கி உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். வங்கி சாா்பில் ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.