ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி வழிபாடு
ஒசூரில் பழைமைவாய்ந்த கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒசூரில் பழைமைவாய்ந்த கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இக்கோயிலில் மாவிளக்கு, அலகு குத்தும் திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்தும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக கோயிலில் மூலவா் அம்மனுக்கு நள்ளிரவு முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுடன் பூஜைகள் நடைபெற்றன.
Advertisement
இதைத்தொடா்ந்து, அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் உடலில் அலகு குத்திக் கொண்டு பம்பை, உடுக்கை மற்றும் பறை இசைகளுடன் ஊா்வலமாக சென்றும், கிரேன் வாகனங்களில் அந்தரத்தில் தொங்கியபடி சென்றும் நோ்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனா். தொடா்ந்து, ஆயிரக்கணக்கான பெண் பக்தா்கள் கோயிலுக்கு மாவிளக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்தினா். திருவிழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு நீா்மோா், பானகம், தா்ப்பூசணி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.