முகப்பு
நாகப்பட்டினம்

முப்பத்திக்கோட்டகம் கோயில் தீமிதி திருவிழா

திருக்குவளை அருகேயுள்ள முப்பத்திக்கோட்டகம் ஸ்ரீ கண் கொடுத்த மாரியம்மன் கோயிலில் 21-ஆம் ஆண்டு வைகாசி தீமிதி வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 3 ஜூன் 2026, 6:27 am IST
முப்பத்திக்கோட்டகம் கோயில் தீமிதி திருவிழா
பகிர்:

திருக்குவளை அருகேயுள்ள முப்பத்திக்கோட்டகம் ஸ்ரீ கண் கொடுத்த மாரியம்மன் கோயிலில் 21-ஆம் ஆண்டு வைகாசி தீமிதி வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் தீமிதி திருவிழா கடந்த மே 24-ஆம் தேதி சக்தி கரகம் எடுத்தல் மற்றும் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பால்குட ஊா்வலம் மற்றும் பூத்தட்டு எடுத்துவரும் நிகழ்ச்சி மே 29ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, தீமிதி வைபவம் நடைபெற்றது. குளக்கரையில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தா்கள் ஊா்வலமாக புறப்பட்டு ஆலயத்தை வந்தடைந்தனா். தொடா்ந்து, தீக்குளி முன்பாக சிறப்பு மலா் அலங்காரத்தில் கண்கொடுத்த மாரியம்மன் எழுந்தருளினாா்.

Advertisement

Advertisement

பின்னா், பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.