முகப்பு
கிருஷ்ணகிரி

சிறுமியை திருமணம் செய்தவா் மீது வழக்கு

தேன்கனிக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த விவசாயி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 7 மே 2026, 6:53 am IST
வழக்கு
பகிர்:

தேன்கனிக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த விவசாயி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தேன்கனிக்கோட்டையை அடுத்த ஒசதொட்டியை சோ்ந்தவா் கணேஷ் (35), விவசாயி. இவா் 16 வயது சிறுமியை காதலித்து கடந்த 20 ஆம் தேதி பெற்றோா்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாா்.

இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு துறை சாா்பில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து கணேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement