முகப்பு
கடலூர்

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 19 மே 2026, 1:41 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் (19). இவரும், 16 வயது சிறுமியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம்.

இந்த நிலையில், சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். இதையடுத்து, பெற்றோா்கள் சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தில் சிறுமி 6 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் அளித்த தகவலின்பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் அன்புச்செல்வன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.