உணவகத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மதுப்புட்டிகள் பறிமுதல்: உரிமையாளர் கைது
பரமத்தி வேலூரில் தனியார் உணவகத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார், உணவக உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூரில் தனியார் உணவகத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார், உணவக உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் நான்கு சாலை அருகே உள்ள ஒரு உணவகத்தில் மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்வதாக பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற பரமத்தி வேலூர் காவல் துறை ஆய்வாளர் லட்சுமணகுமார் சோதனை மேற்கொண்டார். அதில், கடையினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்து, விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளரான அனிச்சம்பாளையத்தை சேர்ந்த பத்மநாபனை (41) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.