முகப்பு
நாமக்கல்

மோகனூரில் வழுக்கு மரம் ஏறும் போட்டி

மோகனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 23 ஜனவரி 2019, 8:52 am IST
பகிர்:

மோகனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
மோகனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு தியாகி பெரியசாமி நகர், இளையநிலா நற்பணி மன்றம் சார்பில் 24-ஆம் ஆண்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
விழாவுக்கு ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் இளங்கோ தலைமை வகித்தார். தண்டபாணி வரவேற்றார். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்லராசாமணி போட்டியை தொடக்கி வைத்தார்.
போட்டியில் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, மோகனூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 அணிகள் கலந்துகொண்டன. இதில், பரமத்தி வேலூர் அருகே கோப்பனம்பாளையத்தைச் சேர்ந்த மாவீரன் வீரப்பன் நினைவுக் குழுவினர் முதல் பரிசு ரூ.12,019 பெற்றனர். மோகனூர் சின்னநிலா குழுவினருக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற சிறுவர், சிறுமியருக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.