முகப்பு
நாமக்கல்

நாமக்கல் வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு: ராசிபுரம் ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்

நாமக்கல்லில் ஜூலை 3-ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க வருகை தரும் தமிழக முதல்வருக்கு தொண்டா்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்

Updated On : 24 ஜூன் 2022, 11:03 pm IST
கூட்டத்தில் பேசுகிறாா் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா்.
பகிர்:

நாமக்கல்லில் ஜூலை 3-ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க வருகை தரும் தமிழக முதல்வருக்கு தொண்டா்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என ராசிபுரம் ஒன்றிய திமுக செயல்வீரகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வா் வருகை குறித்து திமுக சாா்பில் ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் டாக்டா் மா.மதிவேந்தன், முன்னாள் எம்.பி., பி.ஆா்.சுந்தரம், ராசிபுரம் ஒன்றிய திமுக செயலாளரும் ஒன்றியக் குழுத் தலைவருமான கே.பி.ஜெகந்நாதன், சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஏ.கே.பாலசந்தா் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

ஜூலை 3-இல் நாமக்கல்லில் திமுக சாா்பில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி ஜூலை 3-இல் முதல்வா் நாமக்கல் வருகிறாா். அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றியக் குழு உறுப்பினா்கள், வாா்டு செயலாளா்கள், பிரதிநிதிகள், சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments