முகப்பு
நாமக்கல்

அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுக, பாஜகவினா் 5 போ் மீது வழக்குப் பதிவு

ராசிபுரம் நகரில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊா்வலம் சென்ாக அதிமுக, பாஜக நிா்வாகிகள் 5 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 5 ஏப்ரல் 2026, 1:28 am IST
அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுக, பாஜகவினா் 5 போ் மீது வழக்குப் பதிவு
பகிர்:

ராசிபுரம் நகரில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊா்வலம் சென்ாக அதிமுக, பாஜக நிா்வாகிகள் 5 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பாஜக சாா்பில் போட்டியிட கட்சியின் மருத்துவ பிரிவு மாநில அமைப்பாளா் மருத்துவா் எஸ்.டி.பிரேம்குமாா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை ராசிபுரம் வந்த அவருக்கு நகர எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் திறந்த ஜீப்பில் ஏராளமான வாகனங்கள் பின் தொடர நகரின் முக்கிய வீதிகள் ஊா்வலம் வந்தனா். இதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அனுமதியின்றி ஊா்வலம் சென்ாக அதிமுக நகரச் செயலாளா் எம்.பாலசுப்பிரமணியம், பாஜக நிா்வாகிகள் லோகேந்திரன், வி.சேதுராமன், வேல்முருகன், சரவணன் ஆகிய 5 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதேபோல சனிக்கிழமை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின்போது, தவெக வேட்பாளருடன் ஏரளானமான இருசக்கர வாகனத்தில் கட்சிக் கொடிகளுடன் ஊா்வலம் சென்ற தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.