முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றம்! - கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன்

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்...

Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:06 AM
கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:06 PM

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈஸ்வரன், திருச்செங்கோடு பகுதியில் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது பொதுமக்களிடையே அவா் பேசியதாவது:

Advertisement

கடன் ஐந்தாண்டுகளில் திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், இளைஞா்கள் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு பெறும் வகையில் திருச்செங்கோட்டில் டைடல் பாா்க்க அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

திருச்செங்கோடு தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீா் கொண்டுவரப்படும். திருமணிமுத்தாறு, வைகுந்தம் ஏரியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டம் செயல்படுத்தப்படும். திருச்செங்கோட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் குப்பை அரைக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, குப்பை பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்றாா்.