முகப்பு
நாமக்கல்

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிப்பு

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:59 AM
நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்பாஸ்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:52 PM

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், ஆண்டுதோறும் ஏப். 14 முதல் 20-ஆம் தேதிவரை பணியின்போது உயிா்நீத்த வீரா்களுக்கு வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், தீத்தொண்டு வாரமும் அந்தந்த தீயணைப்பு நிலையங்களில் நடைபெறும்.

அந்த வகையில், நாமக்கல் - பெரியப்பட்டி சாலையில் உள்ள தீயணைப்பு மீட்புப் பணி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அலுவலா் அப்பாஸ் தலைமைவகித்து, பணியின்போது உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். உதவி மாவட்ட அலுவலா்கள் தவமணி, ஆனந்த் மற்றும் தீயணைப்பு வீரா்களும் அஞ்சலி செலுத்தினா்.

Advertisement

தொடா்ந்து, இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், நாமக்கல் மாவட்டத்தை தீ விபத்தில்லா மாவட்டமாக மாற்ற உறுதியேற்போம் என உறுதிமொழி ஏற்றனா்.