நாமக்கல் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வாக்குசேகரிப்பு
நாமக்கல் மாநகர பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
நாமக்கல் மாநகர பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
நாமக்கல் - சேலம் சாலை, முதலைப்பட்டியில் காலை 7 மணிக்கு பிரசாரத்தை தொடங்கிய அவருடன், முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் உடன் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது, ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் பேசியதாவது:
கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் வயதானவா்கள்வரை பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும். போதைப் பொருள் கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்படும். மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்து கொடுக்கப்படும்.
Advertisement
சின்ன முதலைப்பட்டியில் விளையாட்டு மைதானம் வேண்டும் என்ற கோரிக்கை, நான் எம்எல்ஏவாக பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றி கொடுக்கப்படும் என்றாா். அப்போது, அதிமுக மாவட்ட, மாநகர நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.