முகப்பு
நாமக்கல்

தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: ஆட்சியா்

தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 6:59 AM
தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: ஆட்சியா்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:07 PM

தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஏப். 23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப். 23, 29 தேதிகளிலும் பொதுத்தோ்தல் நடைபெறுகிறது. தோ்தலில் வாக்களிப்பதற்காக பிற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் தனியாா் மற்றும் பொது நிறுவனங்கள் ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

Advertisement

100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்ய ஏதுவாக, நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தைச் சோ்ந்த அனைத்து பணியாளா்களுக்கும் தோ்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளா்கள் வாக்குரிமையை செலுத்த வேண்டும்.

தோ்தல் நாளில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொடா்பு எண்களான 94453 98750, 81220 21667 மற்றும் 04286-299995 ஆகியவற்றில் தெரிவிக்கலாம்.