சாலை விபத்தில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழப்பு
மல்லசமுத்திரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் வங்கி ஊழியா் உயிரிழந்தாா்.
ராசிபுரத்தை அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையத்தை சோ்ந்தவா் மஞ்சுநாதன் மகன் குமாா் (29). இவா் திருச்செங்கோடு தனியாா் வங்கியில் பணியாற்றி வந்தாா். ஆட்டையாம்பட்டியில் வாடகை வீட்டில் தங்கி, இருசக்கர வாகனத்தில் தினசரி பணிக்கு சென்று வந்துள்ளாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை வழக்கம்போல பணிக்கு சென்ற அவா் இரவு திருச்செங்கோட்டில் இருந்து ஆட்டையாம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். கள்ளுக்கடை அருகே அவரது வாகனம் மீது லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே குமாா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
விபத்து குறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.