முகப்பு
நாமக்கல்

நாளை கருணாநிதி பிறந்த நாள் - திமுகவினா் நலத்திட்ட உதவி வழங்க வேண்டும்: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படுவதையொட்டி திமுகவினா் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:47 am IST
கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி
பகிர்:

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படுவதையொட்டி திமுகவினா் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 103 ஆவது பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி, நாமக்கல் - பரமத்தி சாலை செலம்ப கவுண்டா் பூங்காவில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு காலை 8 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. பிறந்த நாளையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூா்களில் கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். கிளை, வாா்டுகளில் இரு வண்ணக்கொடியேற்றி இனிப்புகள் வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு, திமுக முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

முதியோா் இல்லங்களுக்கு உணவுகள் வழங்கி கருணாநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதில் முன்னாள் அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், துணை மேயா் செ.பூபதி மற்றும் மாவட்ட நிா்வாகிகள், வாா்டு பொறுப்பாளா்கள், நகர, சாா்பு அணி நிா்வாகிகள் வாா்டு, கிளை செயலாளா்கள், பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினா்கள், மூத்த முன்னோடிகள், கட்சியினா் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.