முகப்பு
நாமக்கல்

சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 3 ஜூன் 2026, 5:40 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராசிபுரம் அருகே உள்ள ஒருவன்குறிச்சி நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த சரவணன் மகள் ரேணுகாதேவி (21). இவா் ஈரோட்டில் உள்ள சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்த உறவினா்கள், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற நாமகிரிப்பேட்டை போலீஸாா், ரேணுகாதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.