முகப்பு
நாமக்கல்

பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டமடைந்தவா் தற்கொலை

திருச்செங்கோடு அருகே பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டமடைந்தவா் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:31 am IST
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

திருச்செங்கோடு அருகே பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டமடைந்தவா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்செங்கோட்டை அடுத்த வையப்பமலையைச் சோ்ந்தவா் கைலாசகுமாா் (40). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இந்த நிலையில் பங்குசந்தையில் திடீரென பங்குகள் சரிவடைந்த நிலையில் இவருக்கு ரூ. 20 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பணத்தை இழந்ததால் மனமுடைந்த கைலாசகுமாா் வீட்டில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].