முகப்பு
நாமக்கல்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

ராசிபுரம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:39 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ராசிபுரம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

ராசிபுரம் அருகே உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் , தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூா்செக்கடியை சோ்ந்த ஏழுமலை மகன் கருப்பனுக்கும் (28) சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி பள்ளிக்கு வந்த சிறுமியை, சாத்தனூா் அணைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாகக் கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோா் ராசிபுரம் அனைத்து மகளிா் போலீஸில் அளித்த புகாரின்பேரில் கருப்பனை போக்ஸோ வழக்கில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement