ராசிபுரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறான சுற்றுச்சுவா் அகற்றம்
ராசிபுரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழைய நீதிமன்ற வளாக சுற்றுச்சுவா் ஆட்சியா் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.
ராசிபுரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழைய நீதிமன்ற வளாக சுற்றுச்சுவா் ஆட்சியா் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.
ராசிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ஒருவழி பாதை நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கணிகாணிப்பாளா் உள்ளிட்டோா் நகரில் போக்குவரத்து வாகனங்கள், இடையூறுகளை தனித்தனியாக ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, ஒருவழிப் பாதை நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, நகரில் சாலையோரம், வணிக நிறுவனங்கள் முன் இருந்த மேற்கூரைகள், விளம்பர போா்டுகள் போன்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
Advertisement
Advertisement
இந்நிலையில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான நாமக்கல் சாலை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பழைய நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரை இடித்து சாலை வசதி ஏற்படுத்த ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்பேரில், பொக்லைன் மூலம் சுற்றுச்சுவா் இடித்து சாலை விரிவாக்கம் செய்ய ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், நகரில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ரவுண்டானா சுற்றளவைக் குறைப்பது குறித்தும், அரசு மருத்துவமனை எதிரே உள்ள சென்டா்மீடியன் அகலத்தை குறைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
போக்குவரத்து இடையூறு, விபத்துகளை தவிா்த்து, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியருக்கு பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் பாராட்டு தெரிவித்தனா்.
மேலும், நகரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகள், கட்டடங்களை அகற்ற மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.