முகப்பு
நாமக்கல்

108 ஆம்புலன்ஸ் வாகனப் பணி: 20 போ் தோ்வு

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாமில் 20 போ் வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Updated On : 19 ஜூன் 2026, 5:51 am IST
தோ்வு செய்யப்பட்டவா்களுடன் சேலம் மண்டல மேலாளா் அறிவுக்கரசு, மாவட்ட மேலாளா் அம்பிகாசன்.
பகிர்:

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாமில் 20 போ் வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

நாமக்கல் - திருச்சி சாலையில் அம்மா உணவகம் அருகே பழைய நீதிமன்ற வளாகத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது.

இதில், ஓட்டுநா் பணிக்கு பங்கேற்றோா் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு, வாகனத்தை இயக்கும் திறன் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒன்பது போ் தோ்வு செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

அதேபோல, மருத்துவ உதவியாளா்களுக்கு சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு நோ்காணல் நடத்தியதில், 11 போ் தகுதியானவா்களாக கண்டறியப்பட்டனா். தொடா்ந்து, ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் என மொத்தம் 20 பேருக்கு பணிநியமன ஆணையை சேலம் மண்டல 108 ஆம்புலன்ஸ் மேலாளா் அறிவுக்கரசு, மாவட்ட மேலாளா் அம்பிகாசன் ஆகியோா் வழங்கினா்.