திருவிழாவில் விநோதம்: முறம், உலக்கை, சாட்டையால் அடி வாங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்
ராசிபுரத்தை அடுத்துள்ள நாரைகிணறு பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
ராசிபுரத்தை அடுத்துள்ள நாரைகிணறு பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயில்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி மாதம் 12-ஆம் தேதி பூச்சாட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், முக்கிய நிகழ்வாக காட்டேரி வேடமணிந்தவா் திருவிழாவுக்கு வரும் பக்தா்களை முறம், உலக்கை, சாட்டையால் பக்தா்களை அடிக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில், சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று காட்டேரியிடம் அடி வாங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.