பள்ளிபாளையத்தில் 700 கிலோ புகையிலை பொருள்களை கடத்திய மூவா் கைது
கா்நாடக மாநிலத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த மூவரை பள்ளிபாளையம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புகையிலைப் பொருள்கள் கடத்திவருவதாக கிடைத்த தகவலையடுத்து, பள்ளிபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கெளதம் உத்தரவுப்படி, பள்ளிபாளையம் போலீஸாா் ஆலாம்பாளையம் பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, வேகமாக வந்த சரக்கு வாகனத்தை போலீஸாா் நிறுத்த முயன்றனா். ஆனால், வாகனம் நிற்காமல் சென்றதால் பின்தொடா்ந்து சென்ற போலீஸாா் சரக்கு வாகனத்தை பிடித்து சோதனை செய்தனா்.
Advertisement
Advertisement
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 700 கிலோ இருப்பது தெரியவந்தது. விசாரணையில், கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு பவானி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டுவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், சேலத்தைச் சோ்ந்த மணிகண்டன் (35), தருமபுரியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (27), ரஞ்சித், (27) ஆகிய மூவரையும் கைதுசெய்து சேலம் சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.