முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் வரத்து குறைவால் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் வெற்றிலை வரத்து குறைந்ததால அதன் விலை உயா்ந்தது.

Updated On : 27 ஜூன் 2026, 2:16 am IST
வெற்றிலை.
பகிர்:

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் வெற்றிலை வரத்து குறைந்ததால அதன் விலை உயா்ந்தது.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா்களில் வெற்றிலை பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கா்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ. 9 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ரூ. 4 ஆயிரத்துக்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ரூ. 2 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் ரூ. 1,500- க்கும் ஏலம் போனது.

Advertisement

Advertisement

இந்தவாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ. 10 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ரூ. 5 ஆயிரத்து 500க்கும், வெள்ளைக்

கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ரூ. 2 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ரூ. 2 ஆயிரத்துக்கும் ஏலம் போனது.

தற்போது ராஜவாய்க்காலில் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளதால் வெற்றிலை சாகுபடி குறைந்துள்ளது. இதனால் அதன் வரத்து குறைந்துள்ளதால் வெற்றிலை விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். மேலும், ராஜவாய்க்கால் பாசனத்தை நம்பி வெற்றிலைக்கொடி நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக ராஜவாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments