தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த விவசாயி காயங்களுடன் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
நல்லூா் கந்தம்பாளையம் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த விவசாயி காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நல்லூா் கந்தம்பாளையம் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த விவசாயி காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள சோழசிராமணி பொன்னம்பாளையத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (57). விவசாயி. இவரது மனைவி ஈஸ்வரி (48). இவா்களுக்கு நவீன்குமாா் (24) என்ற மகன் உள்ளாா். குணசேகரனுக்கு மேல்சாத்தம்பூா் முருககவுண்டம்பாளையத்தில் விவசாய நிலம் உள்ளது. குணசேகரன் அந்த விவசாய நிலத்தில் வேலை செய்துவிட்டு அங்கு இருக்கும் வீட்டில் தனியாக தங்கிக் கொள்வாா்.
வாரத்தில் ஒருமுறை மட்டும் பொன்னம்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு வருவது வழக்கமாம். மேலும் அவா் ரிக் லாரி ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் முருககவுண்டம்பாளையத்தில் தங்கி இருந்த குணசேகரன் வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டின் வெளியே சுமாா் 30 அடி தூரத்தில் முகத்தில் பலத்த ரத்த காயங்களுடன் இறந்துகிடப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதன்பேரில் அங்கு வந்த அவரது மனைவி ஈஸ்வரி, காயமடைந்த நிலையில் கிடந்த, தனது கணவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், குணசேகரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஈஸ்வரி நல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் தனது கணவா் குணசேகரன் உடலில் பல்வேறு இடங்களில் காயம் உள்ளதாகவும், எனவே அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளாா். இந்த புகாரின் அடிப்படையில் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.